Tuesday 4 September 2012

கல்லூரி மாணவர்களுக்கு பயன்படக் கூடிய மொபைல் பயன்பாடு மென்பொருள் வெளியீட்டு விழா




சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் மொபைல் மென்பொருள் அதன் பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு    03- 09 - 12  அன்று நடைபெற்றது.




கருத்தரங்கில் கோவை வீச்கேன் மென்பொருள் நிறுவனத்தை .சேர்ந்த பொறியாளர் திரு மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மொபைல் மென்பொருள் உருவாக்கும் முறைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.




சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை  இந்த கருத்தரங்கை   ஏற்பாடு செய்திருந்தது.
துணை முதல்வர் வீ. மனோஹரன்  அவர்கள்  மொபைல் மென்பொருளை   வெளியிட்ட போது எடுத்த படம்
மாணவர்களுக்கு பயன்படக் கூடிய முறையில் ஒரு மொபைல் மென்பொருளை கல்லூரி சார்பில் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை வெளியிட்டது. 




விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர் வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள்.




Friday 24 August 2012

சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

சுப்ரமண்யா கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் மென்பொருள் சோதனைகள் மற்றும் அதன் வழிமுறைகள் எனும் தலைப்பில் கருத்தரங்கு    24 - 8 - 12  அன்று நடைபெற்றது.


 கருத்தரங்கில் டாக்டர் N.G.P   கலை மற்றும்  அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி தொழில்நுட்பவியல் துறைப் பேராசிரியர் திரு.ஆந்த்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு மென்பொருள் சோதனைகள் பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.



 சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிப்பொறி பயன்பாடுகள் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை  இந்த கருத்தரங்கை   ஏற்பாடு செய்திருந்தது.


 துறைத் தலைவர் குணசேகர் வரவேற்று பேசினார். விழாவில் கல்லூரியின் தலைவர் திருமதி.ஜெயலக்ஷ்மி தலைமை ஏற்று நடத்தினார்.



 கல்லூரி முதல்வர் திரு. ரமேஷ் குமார் அவர்களும் துணை முதல்வர்              வீ. மனோஹரன் அவர்களும் சிறப்புரையாற்றீனார்கள். துறை இணைப் பேராசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Tuesday 24 July 2012

அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைப்பு

தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் அண்ணா பல்கலைக்கழகங்கள் ஐந்தையும் ஒரே நிறுவனமாக வரும் ஆகஸ்ட் முதல் தேதிமுதல் மீண்டும் ஒருங்கிணைக்கத் தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முடிவு. 

 இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், தற்போது ஒருங்கிணைக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், இவர்களால் பயனடைந்த சில கல்லூரி நிறுவனங்கள் மட்டுமேதான்.


 மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், அண்ணா பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பு பரவலான வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.  முந்தைய ஆட்சியின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. அது நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் முடிவு என்றும், இணைவுபெற்ற கல்லூரிகளை மேற்பார்வையிடுவது எளிது என்றும் அப்போது சொல்லப்பட்டது.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என ஐந்து மண்டலங்களாகப் பிரித்து
ஐந்து துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். கூடுதலாகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பல ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட செலவுகள் மிகமிக அதிகம். ஆனால், தமிழகமும் மாணவர் சமுதாயமும் அடைந்த பயன் என்ன என்று பார்த்தால் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை.  

மண்டல அளவில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம், சிலருக்கு வேலைவாய்ப்பும் பதவியும் கிடைத்தன. அந்தந்த மண்டலத்தில் இடம்பெறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் புதிய துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. சட்டதிட்டங்களை வளைத்துக் குறைவான அடிப்படை வசதிகளுடன் அதிக நன்கொடையும், கட்டணமும் பெற்று லாபமீட்டப் பலரால் முடிந்தது. 

 பருவத் தேர்வுகளை அந்தந்த மண்டலத்தில் உள்ள அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நடத்தின. இதனால் வினாத்தாள்கள் மாறுபட்டன. கல்வித்தரம் மாறுபட்டது. மதிப்பீடுகள், ஆய்வுமுறைகள், பாடத்திட்டம் எல்லாமும் அந்தந்த துணைவேந்தரின் விருப்பம் சார்ந்ததாக மாறியது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் பலதரப்பட்டதாக மாறும் சூழல் ஏற்பட்டது.  ஐந்து துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டபோதிலும், தமிழகத்தின் மாணவர்கள் அனைவரும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வந்துதான் கலந்தாய்வில் பங்குகொள்ள வேண்டியிருந்தது. ஏன் அந்தந்தப் பல்கலைக்கழகங்களே கலந்தாய்வை நடத்தவில்லை என்ற கேள்விக்கு, மாணவர்களின் நலனுக்காகத்தான் கலந்தாய்வு ஒரே வளாகத்தில் நடத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டது. 

சுமார் 2.5 லட்சம் மாணவர்களுக்கு ஒரே இடத்தில் கலந்தாய்வு நடத்துவது சாத்தியம் என்றால், இந்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவதும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சாத்தியம்தானே?  தற்போது இந்த ஒருங்கிணைப்பின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் என்ற ஒரே குடையின் கீழ், ஒரே தரத்திலான கல்வியைப் பயிலும் வாய்ப்பு தமிழகம் முழுவதுமான பொறியியல் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. 

இந்தத் தர அங்கீகாரம், உலக அளவில் கல்வி பயில மாணவர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும்போதும், வேலைவாய்ப்புகளிலும் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.



  திருச்சி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படாமல் தேவையற்ற காலதாமதம் நேர்ந்தது. புரொவிஷனல் சர்டிபிகேட் ஓராண்டுக்குப் பிறகு மதிப்பிழக்கும் நிலையில், தாங்கள் தங்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளப் பட்டச்சான்றிதழ் வேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாகக் கூக்குரல் எழுப்பிய பின்னர்தான், பட்டம் வழங்கப்பட்டது. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தலையிட முடியவில்லை. இந்த அவல நிலையை யார் தட்டிக் கேட்பது? இப்படிப் பல குளறுபடிகளைப் பட்டியலிட முடியும். 

 இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கல்வியாளர்கள், 535 பொறியியல் கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகம் எப்படிக் கண்காணிக்க முடியும், தேர்வு நடத்த முடியும் என்று கேள்வி கேட்கின்றனர். தற்போது இந்தப் பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டாலும், அந்த அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட்டு, ஒரு கண்காணிப்பு அமைப்பாக நீடிக்கும் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள்.  துணைவேந்தர் பதவி இல்லை, துறைத்தலைவர் பதவி இல்லை என்ற மனவருத்தம்தான் பலருக்குப் பெரிதாகத் தெரிகிறது.  

தகவல் தொழில்நுட்பம் உன்னத நிலையில் இருக்கும் இன்றைய சூழலில், 535 கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகம் நிர்வகிப்பது சாத்தியம் என்றாலும், கல்லூரிகளின் எண்ணிக்கையை வைத்து மண்டலங்களாகப் பிரிப்பதைக் காட்டிலும், கல்லூரிகளின் தரத்தை மதிப்பிட்டு, ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருப்பதை இந்த நேரத்தில் நாம் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.  பருவமுறைத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை வைத்து வரிசைப்படுத்தும்போது, சுமார் 100 கல்லூரிகள் மட்டுமே 65%க்கு அதிகமான தேர்ச்சி உள்ள கல்லூரிகளாக இருக்கின்றன. 

ஆகவே கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வைத்து, மிகச் சிறந்த கல்லூரிகள், நல்ல கல்லூரிகள், சாதாரண கல்லூரிகள் என்று மூன்றாக வகைப்படுத்தி, மூன்றுவித கல்விக் கட்டணங்கள் அமல்படுத்துவதன் மூலம், ஒரே பல்கலைக்கழகத்தில் இணைவுபெற்ற கல்லூரிகளுக்கிடையே தரத்துக்கான போட்டியை உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.  அப்படிச் செய்தால்மட்டுமே ஒருங்கிணைப்புக்கு அர்த்தம் இருக்கும்!
                                                                                                                      
                                                                                                                      - தினமணி

Monday 16 July 2012

ஆண்களை விட பெண்களுக்கு அறிவு வளர்ச்சி அதிகம் ??

ஆண் மற்றும் பெண்களிடம் கேட்கும் கேள்விகளையும், அதற்கு அவர்கள் பதிலளிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் சரியான பதிலை அடிப்படையாக வைத்து லண்டனில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் அறிவு வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
இதுவரை அறிவு வளர்ச்சியில் ஆண்களை விட 5 சதவீதம் பின்தங்கியிருந்த பெண்கள், தற்போது முன்னிலைக்கு வந்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன எனவும், மரபணுவையும் மீறி அறிவு வளர்ச்சியில் உயர முடியும் என்பதற்கு பெண்களின் இந்த வளர்ச்சியே உதாரணம் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. 
 



 
 
மேலும் இனி பெண்களிடம் அறிவு தொடர்பாக ஏதேனும் கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆண் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Friday 18 May 2012

கல்விக் கடன் பெறக் கண்டிப்பாக பான்- கார்டு வேண்டும் !!!

மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.


தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற பின்பு பலதவணைகளில் அசலை திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஆனால் பலர் வேலைக்கு சென்ற பின்பும் அசலை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் வங்கிகளில் வராக்கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை வசூலிக்க அதிகாரிகள் செல்லும்போது முகவரிகள் மாறிவிடுகிறது.


இதை தவிர்க்க வங்கிகள் புதிய நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமுலுக்கு வருகிறது.

மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் பான் கார்டு இணைக்க வேண்டும் .கல்வி கடனுக்கு பான் கார்டு அவசியம். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர் இதை கடைபிடிக்கவில்லை. அவர்களுக்கு வருமான வரித்துறையின் பான் கார்டு பற்றிய விழிப்புணர்வு இல்லை. பான் கார்டு இருந்தால்தான் அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியும்.


மேலும் கடன் வசூலையும் பாக்கி தொகையையும் எளிதில் எங்களால் கண்காணிக்க முடியும். கல்வி கடன் வசூலை இந்திய கடன் தகவல் தொடர்பு மையம் ஆவணங்களில் பராமரித்து வருகிறது. பான் கார்டு இருந்தால்தான் கடன் செலுத்தாதவர்களை உடனே கண்டுபிடிக்க முடியும்.
 

மேலும் பான் கார்டு மூலம் வட்டி மானியம் மற்றும் இதர சலுகைகள் பெற தகுதியான மாணவர்களை கண்டுபிடிக்க முடியும். தற்போது ஆண்டு வருமானம் 4 1/2 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி கடனில் மானியம் வழங்கப்படுகிறது.

Monday 7 May 2012

செல்வி. அருணா தேவிக்கு வாழ்த்துக்கள்

"கடின உழைப்பு ஒரு நாள் வெற்றியைத் தரும்" என்ற வார்த்தையை மெய்யாக்கி மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் வழியில் கல்வி கற்று அரசு நடத்தும் குரூப் 1 தேர்வில் முதன்முதலாக எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார் தமிழகம் திருப்பூர் மாவட்டம் கணியூரைச் சேர்ந்த செல்வி. அருணா தேவி.

செல்வி. அருணா தேவிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையிலும் கூட மிகவும் எளிமையாக பயிற்சிக்காக காத்திருப்பதாக கூறி மெதுவாக சிரிக்கிறார் செல்வி. அருணா தேவி. அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதிக்க கணீயூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Wednesday 25 April 2012

இப்படியே போனால், சமூகம் என்ன ஆகும்?

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. 

ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.  கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர்.

20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.  8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.  8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.  ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது. 

 அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!  இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

  கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. 

இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.  செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள்

இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.  பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள்.

 எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.  வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். 

தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.  இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?  

இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.  அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள்.

 இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை.  இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?  ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், சமூகம் என்ன ஆகும்?

Thursday 19 April 2012

இந்தியாவின் வெற்றிச்சாதனை! அக்னி-5 .


அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின்ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.

அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டுச் செல்லக்கூடியது.



தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.

ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.

அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.



அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க Indian Rupee symbol.svg25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

இந்தியாவின் வெற்றிச்சாதனை! அக்னி-5 .


அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின்ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.
 
அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டுச் செல்லக்கூடியது.



தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.

ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.

அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.



அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க Indian Rupee symbol.svg25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.

Monday 2 April 2012

கல்வித் துறையில் கருத்துத் திருட்டு

கருத்துத் திருட்டு என்பது தற்போது கல்வித் துறையில், குறிப்பாக ஆய்வு மாணவர்களிடத்தில் அதிகரித்து வருவது பல பல்கலைக்கழகங்களில் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.  இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இப்போது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் காரணம், எந்த ஓர் அறிவியல் அல்லது ஆய்வுத் தகவல்களையும் இணையதளத்தின் மூலம் எளிதில் தேடியெடுக்க, படியெடுக்க முடிகின்றது என்பதுதான்.

  இணையதளத்திலிருந்து அப்படியே பல பக்கங்களைப் பதிவிறக்கம் செய்து அதை ஆய்வுக் கட்டுரையுடன் இணைத்துவிடும் தந்திரங்களைப் பல ஆய்வு மாணவர்கள் கையாளுகிறார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே மிகவும் வேதனைப்படுவதும், இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திணறுவதும், கருத்தரங்க மேடைகளில் புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது. 

 அண்மையில், இத்தகைய கருத்துத் திருட்டு விவகாரத்தில், பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர். ராவ் ஒப்புதல் அளித்த ஆய்வுக் கட்டுரை சிக்கியது. அந்த ஆய்வுக் கட்டுரையின் சில தகவல்கள் ஏற்கெனவே ஓர் அறிவியல் இதழில் 2010-ம் ஆண்டிலேயே வந்திருப்பதை எடுத்துக்காட்டிய பிறகு, அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.  

அந்த இருவரில் ஒருவர், ""கருத்தை எடுத்துக்கொண்டதில் தவறில்லை, அதன் எழுத்தை மாற்றாமல் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பயன்படுத்தியதுதான் தவறு'' என்றும்கூட சொல்லியிருக்கிறார்.  முன்பெல்லாம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்போது, ஆய்வுக்கு உதவியவர்கள், உதவிய நூல்கள் பட்டியலை மாணவர்கள் இணைப்பார்கள். 

இந்தப் பட்டியல் மிகவும் நீளமாகவும் பல பக்கங்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இவர்கள் பட்டியலில் குறிப்பிடும் நூல்களைப் புரட்டியாவது பார்த்திருக்கிறார்களா என்பதை பேராசிரியர்கள் நேர்காணலின்போது, அந்த நூல் தொடர்பான கேள்விகளைக் கேட்டு சோதிப்பதுண்டு. ஆனால், காலப்போக்கில் எல்லா நடைமுறைகளும் மாறிவிட்டன. 

ஆய்வுக் கட்டுரையின் மையக் கருத்துத் தொகுப்புரையை மட்டுமே படித்துவிட்டு, ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்புதல் வழங்கும் பேராசிரியர்கள் பெருகிவிட்டதும், இத்தகைய துணிச்சலான கருத்துத் திருட்டுக்கு வழிவகுத்துவிட்டது எனலாம்.  கருத்துகளை எடுத்துக் கையாளுதல், மேற்கோள் காட்டுதல், அல்லது கருத்துகளை மேலும் விரிவும் ஆழமும் கொண்டதாக விவாதித்தல் எல்லாமும் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

 இது இலக்கியத்தில் நடைபெறும்போது இதுபற்றி யாரும் அதிகம் கவலைப்படப்போவதில்லை.  "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் கருத்தை, கவிஞர் கண்ணதாசன், "மாநிலம் எல்லாமும் நம் இல்லமே, மக்கள் நம் சொந்தமே' என்று பாடல் வரியாக மாற்றினால், அதை யாரும் கருத்துத் திருட்டு என்று சொல்லிவிட முடியாது. "காலங்களில் நான் வசந்தம்' என்ற பகவத் கீதை வரிகளை, "காலங்களில் அவள் வசந்தம்' என்று எழுதுவதும், அதற்கும் மேலாக கருத்துச் செறிவு தந்து கவிதையை உயர்த்துவதும் கவிஞரைப் பார்த்து வியக்க வைக்கத்தான் செய்யும். 

இலக்கியத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், அறிவியல் ஆய்வுகளில் இதை ஏற்றுக்கொள்வது இயலாது.  ஆய்வு முடிவுகளில் பிறர் கருத்தை ஒப்பீடு செய்யலாமே தவிர, அப்படியே எடுத்தாளவோ அதில் திரிபு செய்து பயன்படுத்துவதோ இயலாது; செய்யவும் கூடாது.  இத்தகைய தவறுகளை ஆய்வு மாணவர்கள் செய்வதற்குக் காரணம் கருத்துத் திருட்டு அல்ல, வெறும் விவரணைத் திருட்டு என்றும் சொல்லப்படுகிறது.  

எழுதத் தெரியாததும், எழுதுவதில் ஆர்வமின்மையும்தான் இத்தகைய மாணவர்களைக் கருத்துத் திருட்டில் ஈடுபட வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஓர் அறிவியல் கருத்தை எடுத்துச் சொல்லும் மொழிநடை வறட்சியானது, தட்டையான மொழியில் அமைந்த உரைநடை என்பதால் இதை மீண்டும் எழுதுவதற்குப் பதிலாக இதேபோன்று எழுதப்பட்ட, விவரித்துள்ள ஆய்வு ஏடுகளின் மொழியைத் திருடுவதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கின்றதே தவிர, கருத்துத் திருட்டாக அவர்கள் நினைப்பதில்லை. 

பாடப்புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி எழுதுவது சரி என்கிற உளவியல் பதிவு, இவ்வாறு அடுத்தவர் ஆய்வு ஏடுகளிலிருந்து கருத்தை அப்படியே எடுத்துக் கொள்வதை ஒரு தவறு என்ற உறுத்தலை அவர்களுக்கு ஏற்படுத்துவதே இல்லை.  பாடப் புத்தகத்தை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை பதிலாக எழுதும் கல்வி முறை மாறினால்தான், அடுத்தவர் ஆய்வுக் கட்டுரையிலிருந்து சோம்பேறித்தனத்தால் ஆய்வுப் பக்கங்களை அப்படியே எடுத்தாளும் நிலைமை மாறும். பாடப் புத்தகத்தில் இடம்பெறாத கேள்வி மூலம் கணக்குத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படுவதைப் போல, அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் தாங்கள் புரிந்து கொண்டதைத் தங்கள் மொழியில் எழுதும் வாய்ப்புகளையும் அதற்கான மதிப்பெண்களையும் அளிக்க வேண்டும்.  இந்தக் கெடுதலிலும் ஒரு நன்மை. 

ஓர் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ஒரு முறைக்குப் பல முறை படிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பேராசிரியர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.  பல முனைவர் பட்ட ஆய்வுகள் எந்தவிதப் படிப்போ, உழைப்போ இல்லாமல் செய்யப்படுவதும், அவற்றை நமது பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்துப் பட்டம் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

 முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரித்துக் கொடுப்பதற்கென்றே தரகர்கள் வீதிதோறும் வலம் வரும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கவோ தட்டிக் கேட்கவோ யாரும் இல்லை என்கிற நிலைமைக்கு யார் காரணம்? 

 இந்தப் பிரச்னையில் மாணவர்களைக் குறை கூறுவதைவிட, பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்து வருவதைப் பற்றித்தான் நாம் கவலைப்பட்டாக வேண்டும். நோட்டுப் புத்தகங்களை விநியோகம் செய்வதுபோல முனைவர் பட்டங்களை வாரி வழங்காமல், முறையான வழிகாட்டுதலும், கண்காணிப்பும் உறுதி செய்யப்பட்டு ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

Thursday 22 March 2012

வேண்டாம் அணு உலை!!



உங்கள் உலையினுள் நிரப்பும் யுரேனியம் அல்ல, நாங்கள்!
    எங்களை உங்கள் அதிகாரத்திற்குள் நிரப்பி விட !
உலையினுள் தண்ணீர் குறைய, யுரேனியம் உருகலாம்!
    ஒரு நாளும் எங்கள் உள்ளங்கள் உருகாது!

கம்பிகளுக்குள் அடைபட்ட கனிமங்கள்அல்ல, நாங்கள்!
    கண்டெண்சர் கொண்டு குளிர்விக்க!
கம்பி வேலி அகதிகள் அல்ல, நாங்கள்!
    எங்களை உங்கள் ஆணவத்தில் அடக்கி விட!
சீசியம் அயோடினும் அல்ல நாங்கள்!
     அணு உலையின் அழுத்தத்தை குறைத்து விட!

கொதிக்கும் ஆவியை குளிர்விக்கும் உங்களுக்கு,
    கொந்தளிக்கும் எங்களை மட்டுமேன் குளிர்விக்க தெரியவில்லை??
தண்ணீர் குறைய உலைகள் கொதிக்கும்!
    எங்கள் கண்ணீர் குறைய, புரட்சிகள் வெடிக்கும்?

நாங்கள் சேர்ணோபில் சோகத்தை கேட்கவும் இல்லை!
    புகுசிமா சீற்றத்தை மறக்கவும் இல்லை!.
உங்களை எதிர்க்க நாங்கள் எதிரீகளும் இல்லை !!

வயதான புகுசிமா வாய்க்ககரீசி போட்டதுபோல
    கூடங்குலம் எங்களை கூடுகள் ஆக்குமோ?
மண்டியிட்டு மண்டியிட்டு கேட்கின்றோம்!!
    இல்லையேல் உங்களால் மண்ணோடு சாய்கிறோம் !!??

Thursday 1 March 2012

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்????

போதைப்பொருள்களில் ஒன்றான ஹெராயினைப் பயன்படுத்துவோர் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் எனப் புள்ளிவிவரம் தருகிறது

 "ஐக்கிய நாடுகள் சபை போதைப்பொருள்கள் அறிக்கை-2011'. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, "தெற்கு ஆசியாவில் 40 டன் ஹெராயின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 17 டன் ஹெராயின் இந்தியாவிலுள்ள போதைஅடிமைகளால்தான் நுகரப்படுகிறது என்று தெரிகிறது.  ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தரும் புள்ளிவிவரத்தின்படி, ஆப்கானிஸ்தானில்தான் மிக அதிகமாக, அதாவது ஆண்டுக்கு 380 டன் ஓபியம் (அபினி) உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 5 டன் அவர்களே சாப்பிட்டதுபோக, மீதமுள்ள 375 டன் அபினியின் பெரும்பகுதி இந்தியா வழியாக உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. 

ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, தெற்கு ஆசியாவில், குறிப்பாக மியான்மர், லாவோஸ் நாடுகளில், 40 முதல் 50 டன் விளைவிக்கப்படுகிறது. வழக்கமாக உலக சந்தைக்குப் போக வேண்டிய இந்த போதைப் பொருள், தற்போது இந்தியாவிலேயே விற்பனையாகும் போக்கு அதிகரித்துள்ளது என்பதைத்தான் ஐ.நா அறிக்கையிலுள்ள புள்ளிவிவரம் நமக்கு உணர்த்துகிறது. 

 2006-ம் ஆண்டு இந்தியாவில் போதைஅடிமைகள் எண்ணிக்கை 7.5 கோடி என்று ஓர் ஆய்வறிக்கை வெளியானது. அதன்படி, மது அடிமைகள் 6.25 கோடி, கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்கள் 90 லட்சம், அபினிக்கு அடிமையானவர்கள் 3 லட்சம், நோயாளிகளை அமைதிப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தும் போதைஅடிமைகள் 10 லட்சம் என்று தோராயமாகக் கணக்கெடுத்தார்கள். 

 ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி, ஓபியம் எனப்படும் அபினி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது 30 லட்சம். அதாவது, கடந்த 6 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்பதுதான் கவலை தரும் விஷயமாக உள்ளது.  இந்தியாவில் அபினி சாகுபடி சுமார் 7,500 எக்டேருக்கு நடைபெறுவதாகவும், இதில் சுமார் 1,000 எக்டேர் பயிரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அழித்ததாகவும் ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் சில மறைவான பகுதிகளில் பரவலாகவே கஞ்சா சாகுபடி செய்யப்படுவதும், பெயரளவில் சிறு பகுதியை மட்டும் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புத் துறையும் நடவடிக்கை எடுத்து அழிப்பதும் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் வருடாந்திரச் சடங்காகத்தான் தொடர்கிறது. இதன் பின்னால் ஒரு மிகப்பெரிய மாபியாவே செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. 

சந்தனக் கடத்தலைவிட இந்தக் கஞ்சா மாபியா சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள்.  சாகுபடி செய்யப்படும் கஞ்சாச் செடிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்துவதில் சிக்கல் இருப்பதால், கஞ்சாவை, எண்ணெய் வடிவத்தில் உருமாற்றிக் கடத்தும் போக்கும் உருவாகியிருக்கிறது. தங்க நாற்கரச் சாலையும் கன்டெய்னர் லாரிகளும் வந்துவிட்ட பிறகு கஞ்சா கடத்தல்காரர்களின் பணி மிகவும் சுலபமாகிவிட்டது என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.  கடத்தப்படும் போதைப்பொருள்களைத் தடுப்பதும் அழிப்பதும் ஒருபுறம் நடந்தாலும், இந்தியாவுக்குள் அதன் விற்பனையைத் தடுப்பது இன்றியமையாதது. 

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெரும்பாலும் தடுப்பு நடவடிக்கையோடு நின்று விடுகிறது. இந்தியாவில் நகரப் பகுதிகளில் நடைபெறும் விற்பனை குறித்து கவலைப்படுவதில்லை. அந்தந்த மாநிலக் காவல்துறை மட்டுமே விற்பனையைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில் இந்தியாவின் மாநகரப் பகுதிகளில் இதுபற்றிய முனைப்பு காவல்துறைக்கு இருப்பதில்லை.  போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடியவர்கள் யார்? எந்தெந்த இடங்களில், எந்தெந்த மறைமுக வழிகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பது காவல்துறைக்கு அத்துப்படி. காவல்துறை மனது வைத்தால் எந்த வகையான போதைப்பொருள்களும் சந்தையில் கிடைக்காமல் தடுத்துவிட முடியும். சந்தையில் கிடைக்காத நிலையில் இதைப் பயன்படுத்துவோர் அல்லது போதைஅடிமைகள் எண்ணிக்கை தானாகவே குறைந்துவிடும். 

ஆனால், போதைப்பொருள் விற்பனைக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதுதான் காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  அடித்தட்டு மக்களும் சமூகத்தில் போக்கிரிகளாக அறியப்பட்டவர்களும் மட்டும்தான் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலைமை இன்றில்லை. 

போதைப்பொருள்களின் விலை உயர உயர, அதைப் பயன்படுத்துவோரும் உயர்குடி மக்களாக இருக்கின்றனர். மிகச் சிறந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தகவல்தொழில்நுட்பத் துறையில் மிகஅதிகமாகச் சம்பாதிக்கும் இளைஞர்கள் ஆகியோரைத்தான் இந்தப் போதைப்பொருள் வியாபாரிகள் குறி வைக்கின்றனர். அதன் விளைவாகத் தகவல் தொழில்நுட்பத் துறையின் கேந்திரங்களாக விளங்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் போதைப்பொருள் விற்பனை மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது.  போதைக்கு அடிமையாதல் என்பது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல. ஒவ்வொரு போதை அடிமையும் ஒரு குடும்பத்துக்கு நிரந்தரச் சுமையாக மாறிவிடுகிறார். ஆங்கிலேயர்கள் சீனாவை அடிமைப்படுத்தியதே போதைப் பழக்கத்தை அந்த நாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான பங்குச் சந்தை, ஜிடிபி வளர்ச்சி, அன்னியச் செலாவணிக் கையிருப்பு, தெருவெல்லாம் மோட்டார் வாகனங்கள், வாழ்க்கை வசதிகள் என்றெல்லாம் இருந்தென்ன பயன்?  
நமது வருங்காலச் சந்ததியினர் போதைக்கு அடிமையாகி விடாமல் நம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், இவையெல்லாமே அர்த்தமற்றவை.                     
                                                                                              - தினமணி

Monday 6 February 2012

Free " Aakash Tablets" for university students: HRD Minister

It’s good news for students in colleges and universities across the country as the Union government plans to give the low cost “Aakash” tablet to them across institutions for free.

“We are planning to distribute Aakash tablets to students free of cost to deliver e-learning experience to one and all,” HRD and Communications & IT Minister Kapil Sibal said at a summit organised by Indian Semiconductor Association in Bangalore.
Sibal clarified that the tablet, costing Rs 1,500 would get a government subsidy of Rs 750. The balance Rs 750 rest would be borne by respective educational institutions, making it literally free for students.




The minister also said that the government has plans to create an ecosystem for the end-to-end production of the tablet in the country. For other buyers Aakash tablet will cost Rs 2,500, as was planned earlier.

“Our country needs to improve in the manufacturing field and we are taking initiatives to set it right and give it a better foothold,” Sibal said.

The low cost tablet, set to change the Indian digital landscape, was unveiled in October 2011 and was available for online booking only in December. The minister had then said that the rich have access to the digital world, the poor and ordinary have been excluded.

Aakash will end that digital divide. However, the tablet, manufactured by the Canadian firm Datawind, received intense criticism when it failed compliance tests by the Indian Institute of technology, Rajasthan, which showed certain glitches. Thus the government’s plan to acquire 1 lakh such gadgets had come to a halt. As result, the delivery schedule, which was to begin on February 2012, is getting delayed.

Meanwhile, the government of Andhra Pradesh has reportedly sent a proposal to Sibal for buying 10,000 such tablets. It was decided by the Andhra Pradesh government that those tablets would be provided to the state universities, engineering and polytechnic colleges.

Even the University of Mumbai has reportedly received about 25,000 booking requests for the tablet. According to news reports, the requests have come from its 90 colleges and departments.

This scheme to avail of these tablets was extended by the Centre and was extended by the HRD ministry for all the universities.

Saturday 28 January 2012

Medical Camp conducted by Paasam Trust & Subramanya College YRC Team

Today, The Great day and surely its became a very Useful day for my own district people.


Yes, Paasam Trust Kodaikkanal & YRC team of Subramanya College of arts &science Conducted a Free Medical Camp at Kumralingam.


In that Camp More than 500 patients were got the Treatments for their various Health Problems.
A team of 21 Doctors gave very good treatments for the patients.This medical camp includes the treatment specially for General , Eye and Dental.


Dr.J.Mascarenhas M.D.,M.S.,D.O.,(Germany) Leads  the Doctors Team and gave great treatment.
Also the team of him conducting a free Plastic Surgery camp at Kodaikkanal from 23-01-2012 to 06-04-2012. The Team really serviced the patients with so care and affectionate. The Paasam Trust Team Provides the tablets and tests for the Patients at Free of cost.


YRC Team of Subramanya College  of arts & science organized this medical camp and The College Principal and Administrative officer inaugurated the camp,Village Panjayat President, YRC team Co-ordinator Mr.Veera sekar and all Faculties of the College and YRC Students were gathered in that function.

Saturday 21 January 2012

கணினி ஆராய்ச்சி பற்றி பாரதியார் பல்கலை.யில் பிப்.10-ல் கருத்தரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "கணினி ஆராய்ச்சி: ஏன், என்ன, எப்படி?‘ என்பது பற்றிய சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறுகிறது.  
 
இந்தக் கருத்தரங்கில் கணினியில் ஆராய்ச்சி செய்வது எப்படி? கணினியில் ஏன் ஆராய்ச்சி செய்யப்படுகிறது? என்னென்ன தலைப்புகளில் ஆராய்ச்சிகள் செய்யலாம்? ஆய்வுக் கட்டுரை எழுவது எப்படி? ஆதார நூற்பட்டியல் தயாரிப்பது எப்படி? ஆய்வறிக்கை தயாரிப்பது எப்படி? என்று விளக்கப்பட உள்ளது. 
 
 எம்.பில். மற்றும் பி.எச்டி. ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆண்டு நடைபெறும் கருத்தரங்கில் 750-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
கருத்தரங்கில் பெயரை பதிவு செய்து கொள்ள www.b-u.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். அல்லது budcaric@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.  மேலும் விவரங்களுக்கு, 9842012361, 9790004351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

My Friend Venkat Sundar in Vijay's "Nanban" Film

His Scene in Nanban Film
I noticed in Facebook that My friend Venkat Sundar in Nanban Film. Venkat was My PG Class Mate (MCA). But i didnt watch that movie yet. Really its very happy to hear my friend is in acting, Even he act with Vijay and Jeeva in his 1st movie itself.

Venkat with Actor jeeva

With Director Shankar

With Vijay
Shankar's Film is always like a gift, even more its being special for me because of  my friend Venkat Sundar.

He really acts well in mime & dramas in college days. He is specialist in Punch dialogs. Really i feel so happy that he currently acting in an another movie " Yaruda Magesh"

Each & Every persons has some talents But it really established when he work hard.

"Hard Work Leads To Success", He Proved.


All the Best to my Dear Friend and Best Wishes to him to become a Hero of Kollywood.

Monday 9 January 2012

Bonanza release - 2012


I have realized that sometimes books are more human than the people.So i Decided to Release a good book for my students.    
                

The Book Bonanza Is for the Students of MK University in Computer science Base. 
Wrapper Design of the Book BONANZA


Bonanza is a collection of notes for a subject,which consist of 5 units from the various Authors & from various websites.

The subjects are,
1.Visual Programming
2.Computer Graphics
3.Cryptography
4.Web Technology
5.System Software
6.Digital Principles and applications
7.Java.

The Book is not a guide or a study material. Its full of Making Confidence to the students and introspect about the Particular subject. 

Really it going to useful for the Rural based Students who cant access  internet , Volumes of Books about that subject.



A long time desire come true, yes the Bonanza released on 02 jan 2012 at 4.30pm in subramanya college of arts and science.

 Principal Message About BONANZA

In presence of principal Dr.R.Ramesh kumar ,the administrative officer Mr.Kumar  and the senior professor Mrs. Janaki released  the book  Bonanza.
BONANZA Release

College principal Dr.R.Ramesh kumar has released  the book  Bonanza to Head ,department of commerce Mrs.k.sumathi.

The administrative officer Mr.Kumar  has released  the book  Bonanza to Head , Department of mathematics Ms. Janaki.


Senior professor Mrs. Janaki released  the book  Bonanza to Head ,department of tamil Mr.P.Karthik.


The Real Achievement is getting Good feed back from the Student Community.& All the Books are sold and waiting for the 2nd edition........