Saturday 31 December 2011

Have a Great Year !!!



Wednesday 28 December 2011

Real Turning Points in 2011

January 915Southern Sudan holds a referendum on independence.



January 14Arab Spring: The Tunisian government falls after a month of increasingly violent protests; President Zine El Abidine Ben Ali flees to Saudi Arabia after 23 years in power.

 

February 11Arab Spring: Egyptian President Hosni Mubarak resigns after widespread protests calling for his departure, leaving control of Egypt in the hands of the military until a general election can be held.




April 11 – Former Ivorian President Laurent Gbagbo is arrested in his home in Abidjan by supporters of elected President Alassane Ouattara with support from French forces thereby ending the 2010–2011 Ivorian crisis and civil war.

 

May 1 – U.S. President Barack Obama announces that Osama bin Laden, the founder and leader of the militant group Al-Qaeda, has been killed during an American military operation in Pakistan.



October 20 Arab Spring and the Libyan civil war: Libyan leader Muammar Gaddafi is killed in Sirte, with National Transitional Council forces taking control of the city, and ending the war.




Sunday 25 December 2011

BONANZA -2012

Wrapper Design  of the book "  BONANZA"

I have realized that sometimes books are more human than the people.So i Decided to Release a good book for my students.


yes, It may be my New Year Gift to them......

"Bonanza" is Under Process.

coming soon.................

Friday 9 December 2011

Top Searches of the year 2011

                                   Top Searches of the year 2011

                                                   1. Person of the Year: Anna Hazare

                                                   2.Sportsperson of the Year: Sachin Tendulkar 
 
                                                         3.Celeb of the Year: Katrina Kaif
                                                       4. Word(s) of the Year: Lokpal Bill
                                                5.Event of the Year: Cricket World Cup 2011
                                                               6. Car of the Year: Maruti Swift

                                                   7.Gadget of the Year: Samsung Galaxy Tab

பிஎச்.டி.-க்கு வார விடுமுறை நாள்களில் படித்துப் பெற்ற முதுநிலை பட்டம் செல்லாது'

ஆராய்ச்சிப் படிப்புகளை (பிஎச்.டி.) மேற்கொள்ள வார விடுமுறை நாள்களில் படித்து பெற்ற முதுநிலைப் பட்டம் செல்லாது என்பதை பல்கலைக்கழகங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்ற எம். முத்தமிழன் என்ற மாணவர், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. சேர விண்ணப்பிருந்தார். அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். 
 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வார விடுமுறை நாள்களில் படித்தவர்களை பிஎச்.டி. படிப்பில் சேர்க்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது.  எனினும், இதுகுறித்து 2012-ல் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்னர் தெளிவான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. 
 இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களிடம் கேட்டு பெற்ற விவரங்கள்:  சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: பிஎச்.டி. மேற்கொள்ள வார விடுமுறை நாள்களில் படித்து பெற்ற பட்டம் செல்லாது.
 பல்கலைக்கழகத்தில் 2011-12 கல்வியாண்டில் வார விடுமுறையில் படித்த பட்டம் பெற்ற மாணவர்கள் யாரும் ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படவில்லை.  சென்னை அண்ணா பல்கலைக்கழகம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்போது 2,984 பேர் பிஎச்.டி. மேற்கொண்டு வருகின்றனர். 
இவர்களில் யாரும் முதுநிலை பட்டப் படிப்பை வார விடுமுறை நாள்களில் படித்தவர்கள் அல்ல.  கடந்த 2001-2010 வரை பல்கலைக்கழகத்தில் 1,793 பேர் ஆராய்ச்சி (பிஎச்.டி.) பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரும் முதுநிலை பட்டப் படிப்பு வார விடுமுறை நாள்களில் படித்து பெற்றவர்கள் அல்ல.

படிக்காமலே பெயருக்கு பின்னால் பல Ph.D சேர்த்துக்கொள்பவர்களை தடை செய்ய  இதுவரை ஏதும் சட்டம் இல்லை.

Thursday 8 December 2011

Salute to Sehwag!!!

Sehwag overhauled Sachin Tendulkar's world-record-breaking 200. He got there in 149 balls; the first 100 came in 69 balls. He smashed 25 fours and seven sixes to destroy the West Indies bowlers, who came to Indore on a high after registering their maiden tour victory in the 3rd ODI at Ahmedabad.

India's highest ever ODI total is the fourth best by any team ever. 



The first batsman to make a double ton, Sachin Tendulkar, got his 200 against South Africa at Gwalior in February 2010. 
Tendulkar had scored 200 not out off 147 balls to take India to 401/3 in that game.  

HARD WORK MAKE HERO'S

Saturday 3 December 2011

மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்கலாமா??

லோக் சத்தா - மக்கள் சக்தியின் தேசியத் தலைவர் டாக்டர்.ஜெயப்ரகாஷ் நாராயணன்(டாக்டர்.ஜே.பி):



மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை வரவேற்பதுடன் இது நீண்ட நாட்களுக்கு முன்னரே நடைப்பெற்றிருக்க வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார் .

                         சில்லறை வர்த்தகம் துவக்கத்தில் பொருளாதாரத்தை விட வேகமாய் வளரும். புதிய வியாபாரங்கள் இந்த அன்னிய முதலீட்டுக்கு செல்லும், மரபுசார் சில்லறை வியாபாரிகளுக்கு தொடர்ந்து அவர்களின் பங்கு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டாக்டர்.ஜே.பி அவர்கள் முன்னொரு காலத்தில் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்ட போதும், இதனால் பெரும்பாலானோர் வேலை இழப்பார்கள் என்று ஒரு சாரார் எதிர்த்து வந்தார்கள் என்றும் அது பின்னர் பொய்யாக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

"தற்பொழுது ஒரு கிலோ அரிசிக்கு ரூ.18 மட்டுமே விவசாயி பெற, நுகர்வோர் அதே ஒரு கிலோவிற்கு ரூ.30-35 வரை கொடுக்கிறார்கள். அதே போன்று காய்கறிகள், பழங்களுக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலையில் 35% விலையே விவசாயி பெறுகிறார்.


பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் இடைத்தரகர்களை நீக்கி, பொருட்களின் மதிப்பை உயர்த்தி, வீணாகும் பொருட்களையும், உணவுப்பற்றாக்குறையையும் அகற்றி, பொருட்களுக்கு நிலையான விலையை உருவாக்கி விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் உதவும்."

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: விஜயகாந்த் 

Dr. Vijaykanth



"அந்நிய நாட்டு முதலீடு நம்முடைய நாட்டில் கூடவே கூடாது என்று நான் கூறவில்லை. அந்நிய நாட்டு முதலீடு ஒன்று நம்முடைய நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இங்கேயே உற்பத்தி செய்கிற பொருளை வாங்கி, இங்கேயே விலைக்கு விற்கும் வியாபாரம் தொன்று தொட்டு நாம் செய்து வருவதே தவிர, நமக்கு தெரியாதது அல்ல. 

இரண்டவாது அந்நிய நாட்டு மூலதனம் நம்முடைய நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் இதுவோ வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கு பதிலாக, இருக்கின்ற வேலை வாய்ப்பையும் பறிக்கின்ற ஒன்றாகும். ஆகவே எந்த வகையில் பார்த்தாலும் இந்த அந்நிய நாட்டு மூலதனம் தேவையற்றது மட்டுமல்ல, தீதானதும் கூட. ஏற்கனவே வர்த்தகம் என்ற பெயரால் வந்த கிழக்கிந்திய கம்பெனிதான் இந்தியாவை 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி சுரண்டியது. அதே வகையில் இன்றும் வரலாறு திரும்புகிறது என்று சொல்வதைப் போல மீண்டும் ஆதிக்க நாடுகளின் பன்னாட்டு கம்பெனிகளை இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுப்பதை தே.மு.தி.க. சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்

 உண்மையிலேயே இந்த மசோதா விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் ஊக்கம் அளிக்கும் எப்படி??


 

சில்லறைவணிகத்தில்  கம்பனிகள் இறங்குவது விவசாயிகளுக்கு பெரும் வரமாக அமையும் என்பது உண்மை. இந்தியாவில் 50% காய்கறிகள் கடைகளை அணுகுமுன்னரே அழுகி வீணாகின்றன.

இந்திய வணிகர்களால் குளிர்சாதன வசதி, நியாயமான விலை போன்றவற்றை விவசாயிகளுக்கு தர இயலவில்லை. ஆனால் இந்த கம்பனிகள் சில்லறை வணிகத்தில் இறங்கினால் காண்டிராக்ட் விவசாயம், ஃபார்வெர்ட் டிரேடிங் போன்ற முறையில் விவசாயிகளுக்கு நல்ல விலையும்,குளிரூட்டப்பட்ட பாதுகாப்புமுறையால் விளைபொருள் பாதுகாப்பு போன்றவையும் கிடைக்கும். பால் உற்பத்தி,முட்டை உற்பத்தி போன்றவை இதனால் நல்ல லாபம் அடையும். 

தற்போதைய நிலையில் காய்கறி சந்தைக்கு வந்ததும் வணிகர்கள் வந்து ஏலம் பேசி பொருட்களை குறைந்த விலையில் வாங்குவது நடக்கிறது. ஆனால் இந்த கம்பனிகள் முன்கூட்டியே விலைநிர்னயம் செய்து என்ன தரத்தில் பொருள் வேண்டும் என நிர்ணயம் செய்வதால் விவசாயிக்கு பயிரிடுவதற்கு முன்பே தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது தெரியும். விளைபொருள் அழுகி வீணாவ்தும் நடவாது. 

வாடிக்கையாளருக்கும் தரமான பொருள் குறைந்த விலையில் கிடைக்கும். எடைகுறைவு, அதிக விலை என்ற பேச்சே இல்லை.டீவி,டிவிடி முதல் காய்கறி வரை அனைத்துபொருளும் நல்ல தரத்துடனும் குறைவான விலையிலும் கிடைக்கும். 

சீனாவில் நுழைந்த வால்மார்ட் அமெரிக்காவுக்கு சீன பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய துவங்கியது. இன்று 10 பில்லியன் டாலர் அளவுக்கு வருடந்தோறும் சீனப்பொருட்களை அமெரிக்காவுக்கு வால்மார்ட் மட்டும் ஏற்றுமதி செய்கிறது. இதனால் வால்மார்ட்டின் வாடிக்கையாளருக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. சீன விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 

வால்மார்ர்ட்டால் அமெரிக்க சிறுவணிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் பல அமெரிக்க நகரங்களில் வால்மார்ட் தான் மிக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை தரும் கம்பனியாகவும் இருக்கிது எனும் உண்மையையும் மறைக்க இயலாது. வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் அனைவரும் வெள்ளையர். வால்மார்ட்டால் வேலை பெறுவோரில் பெரும்பாலானோர் ஏழை கறுப்பினத்தவர் என்ற நிதர்சனமும் இருக்கிறது. 



இந்தியாவில் வால்மார்ட்டால் இதுபோல் ஒரு மாற்றம் நிகழுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. நமது அரசும் சிறுவணிகர்களை நினைத்து தயங்குவதும், விவசாயிகளை நினைத்து மயங்குவதுமாக இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 

மற்ற வெளிநாட்டு கம்பனிகளும் இந்தியாவில் நுழைந்தால் பெருநகரங்களில் உள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் விவசாயத்துறை மறுமலர்ச்சி அடையும் எனும் உண்மையும் இருக்கிறது.


இப்போது அவர்கள் பெருவணிகர்களிடம் பொருளை வாங்கி மறுவிற்பனை செய்கின்றனர். இதன்பின் அவர்கள் அதை விட குறைந்த விலையில் பன்னாட்டு கம்பனிகளிடம் பொருட்களை வாங்கி மறுவிற்பனை செய்யலாம். 


எனவே தான் மத்திய அரசின் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நாமும் வரவேற்கலாம்...


Wednesday 30 November 2011

மாறுமா ?? இன்றைய கல்விமுறை !

தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைப் போல, தேர்விலும் பணம் கொடுத்து தேர்ச்சி பெறுவது இன்றைய உயர்கல்வி உலகில் மிக இயல்பான செயலாக மாறிவிட்டது.  

அண்மையில் பொறியியல் கல்லூரியில் பல பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனது தம்பிக்கு மதிப்பெண் போட்டுக்கொடுத்து தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஓர் உதவிப் பேராசிரியருக்கு கையூட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் அந்த கல்லூரி ஆசிரியர் ஏமாற்றிவிட்டார் என்றும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

இந்தச் செய்தி ஏற்படுத்திய பரபரப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இது குறித்து பேச வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். 

தங்கள் பல்கலைக்கழகத்தில் இத்தகைய முறைகேடுகள் இல்லை என்றும் விடை திருத்தும் பணி முறைகேடுக்கு இடமளிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமேடைகளில் இதுபற்றிப் பேசுவதும், மாணவர்கள் இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றக்கூடாது என்று அறிவுரை வழங்குவதும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி பத்திரிகைகளில் தென்படும் செய்தியாக இருக்கிறது.  

துணைவேந்தர்கள் இவ்வாறாகக் கூறினாலும், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் சங்கத்தினர் சொல்லும் கருத்து நேர்மாறாக இருக்கிறது. இவ்வாறு பணம் கொடுத்து தேர்ச்சி மதிப்பெண் பெறுவது பல இடங்களில் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.  

கால் நூற்றாண்டுக்கு முன்பே இத்தகைய "பேப்பர் சேஸிங்' (விடைத்தாளைத் துரத்துதல்) பற்றிய பேச்சு இருக்கவே செய்தது. சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்கள் எந்தப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்துத் தகவல் பெறுவதும், அதன் பின்னர் தங்களுக்கான டம்மி எண்களைப் பெற லஞ்சம் கொடுப்பதும், விடைத்தாள் திருத்தும் பேராசிரியர் வீட்டுக்கே போய், வாசலில் அழுது, கெஞ்சி அல்லது சேவகம் செய்து, எதற்கும் மனம் இரங்கவில்லை என்றால் பணத்தாசை காட்டி அந்தப் பேராசிரியரின் கருணையை எப்படியாவது பெற்று, பாஸ் மார்க் வாங்கி வருவது ஒரு கலையாகவே இருந்தது.

அந்த அனுபவத்தை கொஞ்சம் இட்டுக்கட்டி கண் காது வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லும் தலைமுறையும் இருக்கவே செய்தது.  இப்போது அத்தகைய அனுபவங்களுக்கு அவசியமே இல்லை. 

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் இதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உதவிப் பேராசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும்கூட இருக்கிறார்கள். 

இன்றைய உயர் கல்வி உலகில் இத்தகைய முறைகேடுகள் பொறியியல் படிப்பில் மேலதிகமாக நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.  பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவோ, கண்காணிக்கவோ முறையான அமைப்புகள் இல்லை. அத்தகைய அமைப்புகள் இருந்தாலும் அவை வீணான ஒன்றாக ஒப்புக்கு இருக்கிறதே தவிர, அதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

 அரசு நடத்தும் கலந்தாய்வு மூலமும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் படிப்பிற்கு மிக அத்தியாவசியமான உயர் கணிதத்தில் புலிகள் அல்ல. மேனிலைப் பள்ளியில் படிக்கும் முறை, பாடத்திட்டம் அனைத்துமே பொறியியல் கல்லூரிகளில் மாறிவிடுகிறது. 

 உண்மையாகவே உயர் கணிதத்தில் புரிதல் இருக்கும் மாணவர்களால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்களின் வறட்டு கௌரவத்துக்காகவும், ஏதோ பொறியியல் படிக்காவிட்டால் வருங்காலமே சூன்யமாகிவிடும் என்பது போன்ற தவறான கண்ணோட்டத்தினாலும் கணிதத்தில் பலவீனமாக இருந்தாலும் நன்கொடை கொடுத்தாவது பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் பலர். ஆகவேதான், பொறியியல் மாணவர்கள் பலருக்கும் அரியர்ஸ் அதிகமாக இருக்கிறது.  

பல லட்சம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோரின் கோபத்துக்கு ஆளாகவும்கூடாது. அதே நேரத்தில் தேர்ச்சி பெற்றுவிடவும் வேண்டும் என்கின்ற கட்டாயம் அந்த மாணவர்களை எப்படியாகிலும், எந்தப் பொய்யைச் சொல்லியாவது பெற்றோரிடம் பணம் பெற்று அதைக்கொண்டு முறைகேடாகத் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழியாக இருக்கிறது.  

அப்படியே மாணவர்கள் யோக்கியர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரும் அண்ணன் அக்கா போன்ற ரத்தஉறவுகளுமே இந்த முறைகேட்டில் இறங்கிவிடுகிறார்கள்

படிப்புக்காக பல லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால் இன்னும் கொஞ்சம் செலவழித்து ஒரு பட்டம் வாங்கிவிட்டால் போதும், பிறகு இதேபோல பணத்தைக் கொடுத்து ஒரு வேலையும் வாங்கிவிடலாம் என்கின்ற "நம்பிக்கைவாதி'களாக இருக்கிறார்கள். 

இந்த இரண்டுக்கும் வழியில்லாமல், இதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியில்லாத மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் பார்க்கிறோம்.  மாணவர்கள் எந்தப் பாடத்திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதை அவர்களிடம் விட்டுவிடும் நிலைமை உருவானால், இத்தகைய முறைகேடுகளில் 90 விழுக்காடு தானே மறைந்துபோகும்.  ஒரு மாணவர் தனக்குப் பிடித்தமான பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்கும்போது இத்தகைய பேப்பர் சேஸிங் என்கின்ற வேலைக்கே இடமில்லை. 

கல்லூரிக்கு மட்டம் போட்டு ஊர்சுற்றுவதும்கூட பிடிக்காத படிப்பினால்தான்.  கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரை வெறும் 'அரியர்ஸ் கிளியர்' ஆகிவிட்டாலே போதும். ஆனால், பள்ளி மாணவர்கள் பெற்றோருக்காக மதிப்பெண் வாங்கிடப் படும்பாடு மிக மிக அதிகம்.  

மாணவர்கள் விரும்பும் கல்வி என்பதை நாம் உருவாக்கவில்லை. நாம் உருவாக்கிய கல்வியை மாணவர்கள் படித்தாக வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. கல்வித்துறைத் திணிப்பு ஒருபுறம், பெற்றோரின் திணிப்பு மறுபுறம். இந்த நிலை மாறினால் மட்டுமே, கல்வித்துறையில் ஊழல்கள் களையப்படுவது மட்டுமன்றி கல்வி தரமானதாகவும், பயனுடையதாகவும் மாறப்போகிறது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது.  
                                                                             - நன்றி  தினமணி

Tuesday 15 November 2011

அரசு பள்ளிகளில் இளம் 'அப்துல் கலாம்'கள்

பழனி  கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 


கண்காட்சியை சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி நடத்தியது. விழாவில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


உண்மையில்அரசு பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக பல்வேறு மாணவர்கள் கலந்துகொண்டு 'அறிவியல் கண்காட்சி' ல் சாதித்து காட்டினர். 


கூடங்குலம் முதல் சுனாமி வரை ... பீரங்கி முதல் ரோபோ வரை... விவசாயம் முதல் விண்வெளி வரை... இன்றைய அறிவியலுக்கு இணையாக தங்களது திட்டங்களை விளக்கி இருந்தனர்.


கண்காட்சியில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் சில...
Administrative officer with function organizer


College Chairman watching the exhibits


Students Explaining the Exhibits


Chairman giving Prizes for the Students


Home alert system


Painless Cycle


Tsunami Alert System


Safety Road Alert system in Hill Stations




Ozone  Layer effects




Agri Methods




Wind Energy
Navy
Dying Factory
Nature Fridge
Air Force
Measuring The loaded vehicle in bridges


Students With ROBO
அறிவியல் புரட்சியாளர்கள் அரசு பள்ளி மாணவர்களாகவே இருக்க அடிப்படை தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. அப்துல் கலாம்,
மயில் சாமி அண்ணாதுரை போன்றவர்கள் அனைவரும் இந்த ரிசையில் வந்தவர்களே. 


திறமையுள்ள இது போன்ற மாணவர்களை ஊக்ப்படுத்துவதன் மூலம் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Wednesday 9 November 2011

India's quality of education still poor : World Bank

Though India has some good institutions like IITs and IIMs, they are not as tall as institutions like MIT and Leeds in terms of quality of education provided.

It's not enough that you are putting more children into schools and colleges each year, you will have to bring them at par with international standard.



India has the resources to formulate an efficient education policy, inequality in distribution of resources remains a cause of concern.

India is a country which experiments a lot but these experiments have to yield fruits, there are still schools and colleges functioning without any infrastructure."



World Bank has been supporting basic education in the country to augment the Right to Education (RTE).

World Bank


Our contribution is to bring knowledge and experience to help design education policy. In terms of monetary help, but World bank may contribute full of  bucket but we can get a drop.

"Jai India" The father country of corrupti(o)n(g).....

                                          




Saturday 5 November 2011

சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரியில் மரம் நடு விழா


2011 ம் ஆண்டு சர்வதேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.


மரம் வளர்ப்போம்", "இயற்கையைக் காப்போம்", "இயற்கையை நேசி" "இயற்கையோடு வாழ்வோம்" இதுபோன்ற சொல்லடைகள் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன. காரணம் புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது.



இதனை தவிர்க்கவே மனித மனங்கள் இயற்கை பக்கம் வேகமாக திரும்பியிருக்கின்றது. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. எனவே "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம்.



"இன்றிருக்கும் நிலையே தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும் என்பதில் சந்தேகமில்லை" என்று ஓர் ஆய்வு கூறுகிறது.


எனவேதான் இத்தகைய அவல நிலையை போக்க அரசு, பல தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் மரம் வளர்க்கும் பல ஏற்பாடுகளை செய்கின்றன. அவ்வப்போது விழிப்புணர்வு பேரணிகளையும் நடத்தி வருகின்றன.

அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், புவி வெப்பமடைவதால் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக "சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி யில் மரம் நடு விழா"  இன்று (05-11-2011) இனிதே நடைபெற்றது  .
கல்லூரித் தலைவர் முதல் மரக் கன்றை நட்டு விழாவினைத் துவக்கி வைத்தார்.



கல்லூரி முதல்வர், கல்லூரி நிர்வாக அலுவலர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


கல்லூரி வளாகம் முழுவதும் பசுமை புரட்சி கண்டது. இது போல ஒவ்வொரு கல்லூரி, பள்ளிக்கூடங்களும் இந்த மழை காலத்தில் மரங்களை நடுவதன் மூலமாக ஒட்டு மொத்த இந்தியா வையும் பசுமை பெற செய்திட முடியும்.

விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த  விழாவில் மொத்தம் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. 



மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!