Saturday 27 August 2011

நானோ தொழில்நுட்பம் (Nano Technology)

அறிவியல் துறைக்கு சமீபத்திய தொழில்நுட்ப வரவு நானோ. நானோ என்றால் மிகச்சிறிய என்று பொருள்.


நானோ(NANO) தொழில்நுட்பம் என்பதை வரையறுப்பதனால், ஒரு கருவி அல்லது பொருளின் வடிவம், தொகுப்பு, பண்புரு போன்றவற்றை உள்ளடக்கிய மிகச்சிறிய அமைப்பைக் கொண்ட தொழில்நுட்பம். அதாவது ஒரு பெரிய கருவியின் பயன்பாட்டை, அக்கருவியின் சிறிய உருவத்தின் மூலம் மிக எளிதாகவும், துல்லியமாகவும் செய்வது எனக் கொள்ளலாம்.
நானோ தொழில்நுட்பம் என்ற வார்த்தை 1980களில் எரிக் டிரக்ஸ்லர் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. மாலிக்யூலர் எனப்படும் மூலக்கூறுகளின் அடிப்படையில் இத்தொழில்நுட்பம் செயல்படுகிறது. நானோ தொழில்நுட்பம் நான்கு படிநிலைகளை(தலைமுறை)க் கொண்டது.

பாஸிவ் நானோஸ்ட்ரக்சர்ஸ்(Passive Nanostructures), ஆக்டிவ் நானோ ஸ்டரக்சர்ஸ்(Active Nanostructures), சிஸ்டம்ஸ் ஆப் நானோசிஸ்டம்ஸ்(Systems of Nanosystems), மாலிக்யூலர் நானோசிஸ்டம்ஸ்(Molecular Nanosystems).
இதில் பாஸிவ் நானோஸ்டரக்சர் முதல் தலைமுறையைச் சார்ந்தது. இது நானோ தொழில்நுட்பத்தின் துவக்க கட்டம் எனலாம். அதாவது கருவிகளைப் பயன்படுத்துவது. கடந்த 2000ம் ஆண்டில் இக்காலகட்டம். 2005ல் இரண்டாம் தலைமுறையான ஆக்டிவ் நானோ ஸ்டிரக்சர்; பல பயன்பாடுகளை மேற்கொள்வது. தற்போது சிஸ்டம் ஆப் நானோ சிஸ்டம்ஸ். 2015க்குப் பிறகு மாலிக்யூலர் தலைமுறை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் மருத்துவத்துறை
உடலியல் மற்றும் மருத்துவத்துறை நானோ கருவிகள் உடலின் சிறிய உறுப்புகள், செல்களோடும் தொடர்பு கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவத்தில் நானோ தொழில்நுட்பத்தின் மூலம், எந்த உறுப்பின் மீது செயல்படுத்த வேண்டுமோ அதைத் துல்லியமாகத் தேர்வு செய்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். அதிகபட்ச பயன்பாடு, மிகக்குறைந்த பக்கவிளைவு என்பதே இதன் நோக்கம்.

மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம்
நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பம் இன்னும் ஆய்வுக்கட்டத்தில்தான் உள்ளது. இத்தொழில்நுட்பம் துல்லியமான, மூலக்கூறு அளவிலான கட்டுமானத் தொகுப்புகளின் அடிப்படையில் உற்பத்தி செய்வது தொடர்பானதாகும். கட்டுமானத் தொகுப்புகளில் இயற்கை மூலக்கூறுகளைப் பயன்படுத்துதல், ஆர்கானிக் பைபர், ஆர்கானிக் கிரிஸ்டல்கள் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நவீன கருவிகள், சென்சார்கள்
நானோ அளவுகளின் அடிப்படையில் தயார் செய்யப்படும் கருவிகள், செயல்பாட்டுத்திறன் மிக்கவையாக இருக்கும். மருந்துகள் குறிப்பிட்ட வைரசின் மீது மட்டும் செயல்படுவதை இதற்கு உ<தாரணமாகக் கொள்ளலாம். புகைப்படம் எடுக்க விசை முடுக்கப்பட்ட உடன் அதனைக் கிரகிக்கும் சென்சார் ஒளியை உமிழ்வதும் இதுபோன்றதே. மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்துடன் இவை நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன.

மருத்துவ ரோபோக்கள்
மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடு, மருத்துவத்துறையில் நானோ ரோபோக்கள், நானோ மருந்துகள் ஆகும். நானோ ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் மரபணு பிரச்னையை சரி செய்தல், மனிதனின் இயற்கை ஆற்றலை அதிகரித்தல், உடல் உபாதைகளில் இருந்து வலியற்ற நிவாரணம், நோய்களில் இருந்து விரைவாக குணமடைதல் போன்றவை சாத்தியமாகும். இருந்தபோதும், அக்கருவிகள் தாங்களாகவே மனித உடலில் சுயமாக மாற்றங்களை நிகழ்த்த அனுமதிக்கப்பட மாட்டாது. அவை வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டே செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நானோ தொழில்நுட்பத்தின் பயன்கள்
இத்தொழில்நுட்பத்தின் மூலம் அதீத திறன்மிக்க கம்ப்யூட்டர்களை உருவாக்க முடியும். கருவிகளையும் உபகரணங்களையும் தற்போதைய எடையை விட 50 மடங்கு லேசாக, அதேசமயம் தற்போதுள்ள வலிமையோடு தயாரிக்க முடியும். ஜெட் விமானங்கள், ஏவுகணைகள், கார்கள் ஏன் நாற்காலிகள் உட்பட அனைத்தையும், மிகவும் உறுதியானதாக, எடைகுறைவாக, மிகக்குறைந்த செலவில் தயாரிக்க முடியும்.

மாலிக்யூலர் அறுவைசிகிச்சை உபகரணங்கள், கம்ப்யூட்டர்களின் வழிகாட்டுதலுடன் ரத்த ஓட்டத்தில் கலந்து, கேன்சரை உருவாக்கும் செல்களை அழித்தல், மோசமான பாக்டீரியாக்களை எதிர்த்தல், ரத்தக்குழாய் அடைப்பைச் சரி செய்தல், தேவையான பிராண வாயுவை பலவீனமான இடங்களுக்கு பரவச் செய்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும்.

அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தை வழங்க இது உறுதுணையாக இருக்கும். சின்னம்மை மிக அரிதாகக் காணப்படுவது போன்று, உடல்நலக்குறைவும் மிகஅரிதாகவே இனி இருக்கும். இறந்த செல்களை மாற்றி அமைப்பது கூட சாத்தியமாகும்.

நானோ தொழில்நுட்பத்தின் அபாயம்
மனித குல மேம்பாட்டுக்கு இத்தொழில்நுட்பம் உதவிகரமானதாக இருந்தாலும், இதன் அபாயமான மறுபக்கத்தையும் மறுக்க இயலாது. ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதைப் போலவே, இதன்மூலம் மலிவான, அபாயகரமான ஆயுதங்களையும் தயாரிக்க முடியும். மாலிக்யூலர் நானோ தொழில்நுட்பத்தில் ரோபோக்கள், மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவை தாங்களாகவே பெருகிக்கொள்ளக்கூடிய அபாயமும் உண்டு.

எனவே, சுயமாக பிரதி செய்து கொள்ளக்கூடிய நிலை, மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அந்த உற்பத்திக்குத் தேவையான கனிமவளங்கள் சுரண்டப்படக்கூடும்.

நானோ தொழில்நுட்பம் அன்றாட வாழ்வில் இணைந்திருக்கிறது. ஆனால் இது துவக்கம் மட்டுமே. நானோ தொழில்நுட்பம் உடல்நலம் மற்றும் சூழலியல் பிரச்னைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வுகளில், நானோ தொழில்நுட்பம் எதிர்பாராத விளைவுகளையும் தந்திருப்பது தெரிய வந்துள்ளது. காலுறைகளில் பயன்படுத்தப்படும் சில்வர் நானோபார்ட்டிக்கிள்கள், வியர்வை துர்நாற்றத்தை தடுக்கின்றன. 

அதேசமயம் அவை சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் பதம் பார்க்கின்றன.
நானோ பார்டிக்கிள் மூலம் சுவாசித்த எலியின் மூளை, நுரையீரல்களில் நானோ பார்ட்டிக்கிள்கள் தங்கி விட்டிருக்கின்றன. நானோ டைட்டானியம் டை ஆக்சைடை சுவாசித்த பிராணியின் டி.என்.ஏ.,க்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனிதனுக்கு இதனால், கேன்சர், இதய நோய் போன்ற பெருநோய்களை உருவாக்கக் காரணியாகலாம். நானோ புரட்சியால் பயன்கள் விளையும் அளவுக்கு, அபாயங்களும் நேரிடும். எனவே நானோ தொடர்பான ஆய்வுகளும், பயன்பாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும். அதுதான் சூழலியல் அபாயங்களைக் குறைக்கும்.

Saturday 20 August 2011

ஜன் லோக்பால் என்றால் என்ன? ஏன் இதற்கு இந்த முக்கியத்துவம்?!

இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.


"ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்/வேண்டுகோள்/அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. 

குடிமக்கள் பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஜன் லோக்பால் மசோதவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஹசாரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். நான்கு நாட்கள் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த ஆதரவை தொடர்ந்து மத்திய அரசு இறங்கி வந்தது.

லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு அரசு குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஈடாக சிவில் சமூகத்திலிருந்தும் ஒரு குழுவை அமைக்கவும், இந்த இரண்டு குழுக்களும் கலந்தாலோசோத்து லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு ஒப்புக்கொண்டது.

அதன் பின்னர் இரண்டு தரப்பும் பல முறை கூடி ஆலோசித்தும், ஹசாரே குழுவினர் வலியுறுத்தியபடி, நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகிய தரப்பினரை மசோதாவில் உள்ளடக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.

இதனையடுத்து இருதரப்புமே தனித்தனியாக தங்களது கண்ணோட்டத்தில் தனித் தனி மசோதாக்களை உருவாக்கின.


இதனைத் தொடர்ந்து அந்த பல் இல்லாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில்தான், அந்த மசோதவை "ஜோக் பால் மசோதா" என்று ஹசாரே குழுவினர் விமர்சித்தனர்.

அதே சமயம் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஆனால் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே, காவல்துறை விதித்த நிபந்தனைகளை ஏற்கமறுப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறி அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

ஆனால் ஹசாரேவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டதை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது.

ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தாத வரை சிறையிலிருந்து வெளியே வர மறுத்து தமது உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹசாரே, டெல்லி காவல்துறை நிபந்தனைகளை தளர்த்திய பிறகே நேற்று சிறையிலிருந்து வெளியே வந்து,தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


ஒரு சிலர் ஹசாரேவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை விமர்சிக்கிறார்கள்.உண்ணாவிரத போராட்டத்தினாலெல்லாம் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார்கள்.ஆனால் இப்படியே சொல்லிக்கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் இதனை அனுமதிப்பது? எதற்கும் ஒரு தொடக்கப் புள்ளி வேண்டாமா? அந்த தொடக்கப்புள்ளியாக ஏன் ஹசாரேவின் போராட்டத்தை பார்க்கக் கூடாது?  

இந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஜன் லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

1) ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அளவில் "லோக்பால்" மற்றும் மாநில அளவில் "லோக்ஆயுக்தா" அமைக்கப்படும்.

2) உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவை முற்றிலும் அரசின் சுயேட்சை அமைப்பாக இயங்கும்.அவர்களது விசாரணையில் எந்த ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரியும் தலையிட முடியாது.

3) ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும், வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.

4) ஊழல் மூலம் அரசாங்க கஜானாவுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடை, தண்டனை விதிக்கப்படும்போதே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்படும்.

5) இது சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்றால், அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்துகொடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.

6) எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது ( வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு வேண்டி போன்ற )விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

7) அதே சமயம் லோக்பால் அமைப்பில் ஊழல்வாதிகளையும், பலவீனமானவர்களையும் உறுப்பினர்களாக அரசாங்கம் நியமித்தால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் லோக்பால் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளால் அல்லாமல் நீதிபதிகள், குடிமக்கள் மற்றும் அரசமைப்பு அதிகாரிகளால் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) லோக்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பினர் ஊழல் செய்தால் என்ன செய்யலாம்? லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வெளிப்படையாக நடைபெறும் என்பதால், புகாருக்கு ஆளாகும் லோக்பால் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபணமானால் இரண்டு மாத காலத்திற்குள் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.

9) தற்போதுள்ள ஊழல் தடுப்பு ஏஜென்சிகள் என்னவாகும்? மதிய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி), சிபிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை லோக்பாலுடன் இணைக்கப்படும்.எந்த ஒரு அதிகாரி, நீதிபதி அல்லது அரசியலாவாதியையும் தன்னிச்சையாக விசாரித்து வழக்கு தொடரும் அதிகாரமும், அரசு எந்திரமும் கொண்ட முழு அதிகாரமிக்க அமைப்பக லோக்பால் திகழும்.

10) ஊழலால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக குரல் கொடுப்பவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் கடமை லோக்பாலுக்கு உண்டு. 
 

Friday 19 August 2011

New Secretariat complex in Chennai to become super specialty hospital



Tamil Nadu Chief Minister J Jayalalithaa announced in the state legislative assembly that the new Secretariat complex, built by the previous DMK regime, would be converted into a multi-super specialty hospital on the lines of the All India Institute of Medical Sciences (AIIMS) in New Delhi.

New Secretariat building


Making a suo motu statement in the House, she said her government would make necessary changes in Block 'A' measuring about 97,829 sqm area and convert it into a multi-specialty hospital. 

AIMS Hospital

She said the complex would soon be put to use for the benefit of public after appointing doctors, nurses, technical experts and installing modern equipments.

"The under construction Block 'B' will be completed soon and the government will start a new medical college," she said amid prolonged thumping of desks by all members of the House, barring the opposition DMK, which has been boycotting the Assembly proceedings.


Ms Jayalalithaa said all sections of the people in the state, especially the poor and the down trodden, would get quality treatment for various types of diseases free of cost at the new hospital. 

She said the government had decided not to use the new legislative complex, built by the previous DMK regime, as it was not sufficient to house all the 36 departments and was not conducive for discharging day- to-day official work. 
 Secretariat at Fort St George


It may be recalled that the AIADMK, after coming to power in May this year, had also decided to function from the old Secretariat at Fort St George.
.

Wednesday 17 August 2011

மத்திய அரசை மண்டியிட வைத்த மக்கள் சக்தி!

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அண்ணா ஹசாரேவை, யோகா குரு ராம்தேவ் மீது போலீஸை ஏவிவிட்டு அடக்கியதைப் போன்று நசுக்கிவிடலாம் என்று கருதிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் சக்தியை பார்த்து மிரண்டு, பணிந்து போய் தற்போது அவமானப்பட்டு நிற்கிறது.


ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதில், ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்தியது மத்திய அரசு.

ஆனால் இந்த மசோதாவில் ஊழல் செய்யும் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க ஏதுவாக அவர்களையும், விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.

பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு விலக்கு அளித்து தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவையே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆனால் இந்த மசோதா வலுவற்றது என்று கூறிய ஹசாரே, பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி (நேற்று) முதல் டெல்லியிலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் ஹசாரேவின் கோரிக்கையையும், அவரது உண்ணாவிரத போராட்டத்தையும் தாம் விரும்பவில்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை உணர்த்தியது. உண்ணாவிரதத்தின் மூலம் ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீறக்கூடாது என்றும் அவர் பேசியது, ஹசாரே விடயத்தில் அவரது மனவோட்டம் என்ன என்பதை பட்டவர்த்தனமாகஉணர்த்தியது.

அதே சமயம் ஹசாரேவின் உண்ணாவிரதம் நிச்சயம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ளும் என்ற அச்சமும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது.எனவே அதனை தடுக்கவும்,கூடவே ஹசாரேவை கைது செய்து உள்ளே வைத்தால், அதனால் மக்களிடையே எழும் ஆதரவு அல்லது போராட்ட வீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என்று நாடி பிடித்து பார்க்கவும் திட்டமிட்டது.

இதனால் ஹசாரே ஏற்கமாட்டார் என்று தெரிந்தே,உண்ணாவிரத இடத்தை மாற்றுவது மற்றும் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை டெல்லி காவல்துறை விதித்தது.

எதிர்பார்த்தபடியே அந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார்.அத்துடன் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காதவகையில், 144 தடையுத்தரவு அமலில் இல்லாத ஹசாரே வீடு இருக்கும் கிழக்கு டெல்லியின் மயூரா விகாரில் புகுந்து, நேற்று காலை 7.30 மணிக்கே அவரை கைது செய்து அழைத்து சென்றது டெல்லி காவல்துறை.

இது ஹசாரே ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.அவர்கள் ஹசாரேவை ஏற்றி சென்ற வாகனம் முன்னர் அமர்ந்து மறியலில் ஈடுபட, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களுக்கு மேலாகி படாதபாடு பட்டது போலீஸ்.



அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஹசாரே. 



சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்ற ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையிலேயே, ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவும் அடைக்கப்பட்ட தகவல் பரவியதும் நாடு முழுவதுமே ஹசாரே ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கி மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என ஆவேசம் காட்டத் தொடங்கினர்.

மக்களின் இந்த போராட்ட வீச்சை தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு ஒளிபரப்ப, நாடு முழுவதும் தங்களுக்கு எதிரான ஒருமித்த கருத்து உருவாவதை பார்த்து மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மிரண்டு போனது.

போதாதற்கு எதிர்கட்சிகளும் சமீப காலத்தில் இல்லாதவகையில், ஹசாரே கைதை கண்டித்து ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.

நாடாளுமன்றம் நடப்பதால் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி வியாக்கியானம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அவரது இந்த கருத்துக்கு பதிலடியாக,"ராகுல் காந்தி மட்டும் உத்தரபிரதேசத்தில் 144 தடையுத்தரவை மீறி இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச மாநிலம் பாட்டா - பார்சால் கிராமங்களுக்கு சென்றாரே...?அவரது இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்ததே?" என்று கேட்டபோது, அவர்தான் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாரே என்று மழுப்பலான பதில் ஒன்றை கூறினார் சிதம்பரம். 


ஆனால் ராகுல் காந்தி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னரே கைதானார்.ஆனால் ஹசாரே விடயத்தில் நடந்து என்ன?

தடையுத்தரவு அமலில் இல்லாத கிழக்கு டெல்லியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே? என்று சுட்டிக்காட்டினர் ஹசாரே ஆதரவாளர்கள். 


இது ஒருபுறம் இருக்க, லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் இருக்கும்போது, அது தொடர்பாக போராட்டம் நடத்தலாமா? என்று காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பினர். உடனடியாக இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, மகளிர் மசோதாவும் நாடாளுமன்றத்தில்தான் உள்ளது.அது தொடர்பாக மட்டும் போராட்டம் நடத்தப்படுகிறதே? என்று கேட்டபோது, அதற்கு காங்கிரஸ் தரப்பில் பதில் இல்லை.

இந்நிலையில்தான் ஹசாரே கைது விவகாரம், தாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியதை பார்த்து, மக்கள் சக்தி முன் மண்டியிட்டு, நேற்று இரவே ஹசாரேவை விடுதலை செய்வதாக அறிவித்தது காவல்துறை.

ஆனாலும் சிறையிலிருந்து வெளியேற ஹசாரே மறுத்து விட்டார்.உண்ணாவிரதம் இருக்க நிபந்தனையின்றி அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே சிறையிலிருந்து வெளியேறுவேன் என ஹசாரே உறுதியாக கூறிவிட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அவர் சிறையிலேயே இருந்ததால், நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாகவும், மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் எழுந்த மக்கள் எழுச்சி நீடிக்கிறது. 


இந்நிலையில் சட்ட மசோதாவை மைதானத்தில் பேசி தீர்மானிக்க முடியாது என்று வியாக்கனம் பேசும் காங்கிரஸார், இந்திய விடுதலை போராட்டமே மைதானத்திலும், தெரு முனைகளிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில்தான் தொடங்கியது என்பதை மறந்து போனதுதான் ஆச்சரியமான ஒன்று.

மடியில் கனம் இருப்பவர்களுக்குத்தானே பயம்; மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதே பயம்தானா?  

Sunday 14 August 2011

GIAH @ SCAS -2011

Hon'ble Principal Inaugurating the Exhibition
A hardware expo named  "GIAH-2011" has been successfully conducted on 05-08-2011 at subramanya college of arts and science.
Hon'ble Administrative officer with EXPO team


(GIAH - gathering information about hardwares)  college final year students of computer science department took all the responsibilities to their shoulders to get the programme a grand success.
students in EXPO


They just wanted to do this programme for the first year students those who are not familiar  with computers.
Hon'ble Chairman Lighting the lamp


college chairman lighting the lamp to inaugurate the function Principal and administrative officer gives their address and advised the students make use of it.
Faculties &EXPO students of Dept of Computer science

The young and energetic second and final year students prepared charts & models about the recent  technologies of computer science explained to 1st year students  also they demonstrated how the system really works.

 
Student demonstrating about the CRT


Like this GIAH-2011 the society of the students can develop their leadership qualities and know their strengths and weakness.

Expo Notification












Saturday 13 August 2011

Mobile Phone Operating System

Nowadays majority of the people are using mobile phone. If we ask to spell out few mobile phone manufactures, it wil be 

1. Nokia
2. Sony Ericsson
3. Samsung
4. iPhone
5. Motorola
6. Blackberry
7. Etc.

Even I ask them to spell out few mobile phone service providers, they are saying exactly…

1. Airtel
2. Vodafone
3. Aircel
4. BSNL
5. Idea
6. Etc.

But I ask about mobile phone operating systems. Most of the people are unable to tell even one operating system.

This should not happen to you. Here I have listed the popular mobile phone operating system. Have a look and be ready to tell if anyone asks you about mobile phone operating system.


1. Symbian

2. Android(Google)


3. iPhone OS 


4. Windows Mobile


5. RIM Blackberry

6. Palm OS (Garnet OS)


7. Mobile Linux

8. Etc.   

Monday 8 August 2011

பேரனுக்கு சிபாரிசு செய்ய மறுத்த முதல்வர்

காமராஜர், தன் வீட்டின் முன் அறையில் உட்கார்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர், அவர் வீட்டுக்கு வந்தார். "என்னடா கனகவேல் எப்படியிருக்க...' எனக் கேட்ட
 காமராஜர்.

"நல்லா இருக்கேன் தாத்தா... எம்.பி.பி.எஸ்., படிக்க அப்ளிகேஷன் போட்டேன்.
இன்டர்வியூ நடந்துச்சு... நீங்க ஒரு வார்த்தை சொன்னா, இடம் கிடைச்சிடும். லிஸ்ட் தயாராகறதுக்குள்ள
சொல்லிட்டீங்கன்னா, நான் டாக்டராகிவிடுவேன்' என்றார் அந்த இளைஞர்.

அந்த இளைஞர் கையில் வைத்திருந்த காகிதத்தை, உரிமையோடு வாங்கிப் படித்தார் காமராஜர்.
அந்த விண்ணப்பப் படிவத்தில், அந்த இளைஞரின் பெயர் குறிக்கப்பட்டு, "மே/பா காமராஜர்,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர், திருமலைப் பிள்ளை வீதி, சென்னை' என்று முகவரி
 எழுதப்பட்டிருந்தது.

"என் பேரை எதுக்கு எழுதினே...'

காமராஜரின் குரலில் கோபம் இருந்தது.

 "இல்லை தாத்தா... மெட்ராஸ் முகவரி கேட்டாங்க... எனக்கு உங்களைத் தவிர யாரையும் தெரியாது.
அதனால, இந்த முகவரியைக் கொடுத்திட்டேன்' என்றார் அந்த இளைஞர்.

உடனே காமராஜர் அந்த இளைஞரைப் பார்த்து,
 " கனகவேலு... இந்த டாக்டர் படிப்பு, இன்ஜினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும்.
அவங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாருக்கும் பொதுவா கமிட்டி
அமைச்சிட்டு, இவனுக்கு சீட் கொடு... அவனுக்கு சீட் கொடுன்னு சொன்னா, கமிட்டியே அமைக்க
 வேண்டியது இல்லையே.

"இன்டர்வியூவில நீ நல்லா பதில் சொன்னா, உனக்கு இடம் கிடைக்கும். கிடைக்கலேன்னா,
கோயம்புத்தூர்லே பி.எஸ்சி., அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு. அதை எடுத்துப் படி.
அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. என்னால இதுக்கு சிபாரிசு எல்லாம் பண்ண முடியாது'
என்று பதில் சொல்லி அனுப்பினார். கடைசியில் அந்த இளைஞருக்கு, மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.
காமராஜர் சிபாரிசு செய்ய மறுத்த அந்த இளைஞர்,
காமராஜரின் ஒரே தங்கை நாகம்மாள் வழிப்பேரன்.இதெல்லாம் அந்த காலம்...!

Thursday 4 August 2011

Tamilnadu Govt Announced Rs.8900 Crore Budget

பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் :

* தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது


* ரூ. 8 ஆயிரத்து 900 கோடிக்கு பயன் தரும் திட்டங்கள்

* வரி சீரமைப்பின் மூலம் வருவாய் ரூ. 3,618 கோடி

* எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2 கோடியாக அதிகரிப்பு

* பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணி வழங்க ரூ. 4.6 கோடி

* 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500ம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை

* மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்க ரூ. 912 கோடி

* 2012 ஆகஸ்டில் மின்‌வெட்டு அடியோடு ரத்தாகும்

* சென்னை புறநகர் காவல் ஆணையரகம், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

* போலீஸ் துறை மேம்பாட்டிற்கு ரூ. 51 கோடி ஒதுக்கீடு

* சிறைத்துறை மேம்பாடு மற்றும் கைதிகள் மறுவாழ்விற்கு ரூ. 147 கோடி

* ‌தீயணைப்புத் துறை மேம்பாட்டிற்கு ரூ. 170 கோடி

* கூட்டுறவுத் துறைக்கடனை முறையாக செலுத்துவோர்க்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ. 3 ஆயிரம் கோடி

* உணவு தான்ய சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ. 237 கோடி

* ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தற்கு ரூ. 400 கோடி

* காவிரி ஆற்றில் முத்தரசநல்லூர் அருகே தடுப்பணை

* திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவ கல்லூரிகள்

* சூரிய சக்தியால் இயங்கும் ஒரு லட்சம் தெருவிளக்குகள் அமைக்க ரூ. 248 கோடி

* இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 135 கோடி

* பசுந்தீவன வளர்ச்சிக்கு ரூ. 15 கோடி

* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி

* போடிநாயக்கனூரில் அரசு பொறியியல் கல்லூரி

* புதிதாக 10 தொழிற் பயிற்சி மையங்கள்

* பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ.750லிருந்து ரூ.1000மாக உயர்வு.